குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்ற நபர் கைது

குமாரபாளையத்தில் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-19 09:30 GMT

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்)

குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் மது அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையொட்டி எஸ்.ஐ. மலர்விழி தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்த்த போது, அங்கு ஒருவர் மதுவை அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் குமாரபாளையம் அருகே உள்ள  சாமியம்பாளையம் பகுதியை சேர்ந்த பாபுல் அம்புரோஸ் (வயது 47) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 10 மதுபான பாட்டிகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News