ஒளிரும் தகடுகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையினர்
குமாரபாளையத்தில் சாலையின் நடுவில் உள்ள டிவைடரில் நெடுஞ்சாலைத்துறையினர் ஒளிரும் தகடுகள் அமைத்தனர்.;
குமாரபாளையத்தில் சாலையின் நடுவில் உள்ள டிவைடரில் நெடுஞ்சாலைத்துறையினர் ஒளிரும் தகடுகள் அமைத்தனர்
குமாரபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் நடுவில் உள்ள டிவைடரில் ஒளிரும் தகடுகள் அமைத்தனர்.
குமாரபாளையம் சேலம் சாலையில் போலீஸ் ஸ்டேஷன் முதல் கத்தேரி பிரிவு சாலை வரை 2 கி.மீ. தூரத்திற்கு சாலையின் நடுவில் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் ஸ்டேஷன், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் பிரிவு, குளத்துகாடு பாலம், பவர் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள டிவைடர்களின் முகப்பில் ஒளிரும் விளக்குகள் இல்லாததால், இரவில் வரும் வாகனங்கள் இந்த டிவைடர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். விபத்துக்களை தடுத்திடும் வகையில் இந்த டிவைடர்களில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் பலனாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேலம் சாலை டிவைடர்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒளிரும் விளக்குகள் மற்றும் ஒளிரும் தகடுகள் பொருத்தும் பணி துவங்கியது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சேலம் சாலையில் உள்ள டிவைடர்களில் விபத்துக்களை தடுக்க ஒளிரும் விளக்குகள், முக்கிய சாலை சந்திப்புகளில் ஒளிரும் தகடுகள் மற்றும் பிரிவு சாலைகளில் பதிக்கும் வகையிலான ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டன.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.