குமாரபாளையம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்

குமாரபாளையம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது.;

Update: 2023-09-20 14:45 GMT

குமாரபாளையத்தில் உள்ள காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக குமாரபாளையம் நகரம் முழுவதும் ஆங்காங்கே பக்தர்களால் வைக்கப்பட்ட ஒரு அடி முதல் 9 அடி வரை கொண்ட 34 விநாயகர் சிலைகள் தினசரி சிறப்பு பூஜைகள் செய்யபட்டு பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டு வந்தது.

மூன்றாவது நாளான நேற்று பக்தர்களால் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது. குமாரபாளையத்தில் நகராட்சி அருகில் உள்ள காவிரி கரையோர பகுதியில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் பகுதியினை நேற்றுமுன்தினம் திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் பார்வையிட்டார். அவருடன் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.

அப்போது விநாயகர் சிலைகளை கரைக்க காவிரி ஆற்றிற்குள் பொதுமக்களை யாரையும் அனுமதிக்க மாட்டோம். எங்களால் அமைக்கப்பட்ட ஜே.சி.பி வாகனம் மூலமாக விநாயகர் சிலைகளை பெற்று, அவற்றை காவிரியில் கரைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தவுடன் இதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என டி.எஸ்.பி. கேட்டுக்கொண்டார்.

அதன்படி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஐயப்பன் திருமண மண்டபம் முன்பு காவிரி ஆற்றில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, தடுப்புகள் வைக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் கொண்டுவரும் சில நபர்கள் மட்டும் காவிரி ஆற்றில் இறங்க அனுமதிகப்பட்டன்ர். பெரிய அளவிலான சிலைகள் பொக்லின் மூலம் காவிரி ஆற்றிற்கு எடுத்து வரப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது. ஏராளமான போலீசார், தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News