குமாரபாளையத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்
குமாரபாளையத்தில் மகளிர் குழுக்களுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் நடைபெற்ற இலவச சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி விஜய் கார்த்திக் பங்கேற்றார்.
நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், செந்தூர் பவுண்டேசன் இணைந்து மகளிர் குழுக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் வேதாந்தபுரம் சித்தி விநாயகர் மண்டபத்தில் செந்தூர் பவுண்டேசன் நிர்வாகி கலாவதி தலைமையில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், நீதிபதியுமான விஜய் கார்த்திக் பங்கேற்று, நீதிமன்ற வழக்குகளை யாரெல்லாம் இலவசமாக அணுகுவது? எவ்வாறு விண்ணப்பிப்பது? அரசு திட்டங்களை எவ்வாறு பெறுவது? என்பது குறித்து பேசினார்.
மேலும் பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று, அதற்கு தீர்வு எப்படி பெற வேண்டும் என விளக்கி கூறினார். வி.ஏ.ஓ.க்கள் முருகன், செந்தில்குமார், திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலட்சுமி, எஸ்.ஐ. மலர்விழி, நிர்வாகிகள் மணிகண்டன், வினோத், ஜீவானந்தம், பூபதி உள்பட பலர் பங்கேற்றனர்.