ரோட்டரி சங்கம் சார்பில் மனித சங்கிலி
குமாரபாளையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் இதய நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.;
பைல் படம்
குமாரபாளையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் மனித சங்கிலி நடந்தது.
உலக இதய தினத்தையொட்டி குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் மனித சங்கிலி நடந்தது.சங்க தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். சேலம் சாலையில் சுமார் இரண்டு கி.மீ. தூரம் வரையில் மனித சங்கிலி நடந்தது. இதில் பங்கேற்றோர், இதயம் காக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் ஏந்தியவாறு நின்றனர். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். குமாரபாளையம் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர் மனிதசங்கிலியில் பங்கேற்றனர்.
உலக இதய தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் ௨௯இதயம் தேதி கொண்டாடப்படுகிறது. இதயம் ஆரோக்கியமாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை வழங்குவதிலும், கழிவுப் பொருட்களை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பது இதயம். இதன் செயல்பாட்டில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதனை அசாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.
ஒருவரின் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமானால் இதயத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடந்த இரண்டு ஆண்டுகாலமாக கொரோனா மிகப்பெரிய தாக்கத்தை மக்களின் ஆரோக்கியத்திலும், பொருளாதாரத்திலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மன அழுத்தம், சோர்வு மற்றும் கவலைக்கு ஒட்டுமொத்த மனித சமூகமே உள்ளாகியிருப்பதால், இதயம் சார்ந்த நோய்களின் பாதிப்பை மக்களிடையே அதிகரித்துள்ளது.
இதனால், மக்கள் இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டுமானால், சமநிலையான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இதயத்தில் ஏதேனும் பாதிப்புகள் அல்லது அறிகுறிகள் தென்பட்டால், அதனை புறக்கணிக்காமல் மருத்துவமனைக்கு சென்று பரிசதோனை செய்து கொள்ளுங்கள். மருத்துவர்களின் கூற்றுப்படி, கோவிட் வைரஸ் பாதிப்பு காலத்தில் அதற்கு இணையாக இதய நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையே உலகளவில் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டு மட்டும் இதய சார்ந்த நோய்களால் உலகளவில் 17.9 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். ஒட்டுமொத்த இறப்பு விகிதத்துடன் ஒப்பிடும்போது இதயநோய்களால் இறந்தோரின் எண்ணிக்கை 31 விழுக்காடு. குறிப்பாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். 2016 ஆம் ஆண்டில் என்.சி.டிகளினால் மட்டும் இந்தியாவில் இறந்தவர்கள் 63 விழுக்காடு. இதில், சிவிடி எனப்படும் இதய நோய்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 விழுக்காடு. 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் இதயநோயால் 45 விழுக்காடு பேர் இறப்பை தழுவியுள்ளனர்.