மதுரை: அழகர்கோவிலில் ஆடித் திருவிழா கொடியேற்றம்

மதுரை அருகே அழகர் கோயில் ஆடித் திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2021-07-16 07:14 GMT

மதுரை அருகே உள்ள புகழ்பெற்றா அழகர் கோவிலில், இன்று ஆடிபெருக் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. கொரோனா தடை காலம் என்பதால், பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், கோயில் வளாகத்திலேயே ஆடித்திருவிழாவை எளிமையாக நடத்த, கோயில் நிர்வாகம் உத்தேசித்துள்ளது.

எனினும், இன்றைய கொடியேற்றத்தை தரிசிக்க, கோட்டை வாசல் முன்பாக பக்தர்கள் திரளாக திரண்டனர். எனினும், அவர்களை உள்ளே விடாமல் பூட்டப்பட்டது. திருவிழாவானது, 10 நாள்கள் சமூக இடைவெளியை பின்பற்றி எளிய முறையில் ஆடித் திருவிழா நடைபெறவுள்ளது. அரசு விதிமுறைகளை பின்பற்றி,விழா நடைபெறும் என, கோயில் துணை ஆணையர் பொறுப்பு அனிதா தெரிவித்தார்.

Tags:    

Similar News