சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மாேதி விபத்து: தந்தை, மகன் உயிரிழப்பு

காவேரிபட்டினம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு.

Update: 2022-01-10 11:07 GMT

விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் காவேரிபட்டினம் அரசு மருத்துவமனை வாயிலில் சாேகத்துடன் காத்திருக்கின்றனர்.

காவேரிபட்டினம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியதில் தந்தை,மகன் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அடுத்த ஊத்து பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி இவர் ஓசூரில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி ரோகிணி (25) என்ற மனைவியும் மிதுன்( 2 )என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் பெரியசாமி தனது மனைவி மற்றும் மகனுடன் தனது இருச்சக்கர வாகனத்தில் காவேரிப்பட்டினம் அடுத்த பையூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

அப்போது இவர்கள் கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் பையூர் பேருந்து நிலையம் அருகே வரும் போது இருச்சக்கர வாகனம் நிலைதடுமாறியதாக கூறப்படுகிறது. நிலைதடுமாறிய இருச்சக்கர வாகனம் சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியுள்ளது.

இதில் பெரியசாமி மற்றும் அவரது மகன் மிதுன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மனைவி ரோகினி படுகாயம் காயமடைந்தார். பின்னர் இந்த விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் காவேரிபட்டினம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த காவேரிபட்டினம் போலீசார் படுகாயமடைந்த ரோகினியை மீட்டு ஆம்பலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த பெரியசாமி மற்றும் அவரது மகன் மிதுன் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவேரிபட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவேரிபட்டினம் அருகே இருச்சக்கர வாகன விபத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News