பர்கூர்: மனைவி இறந்த துக்கத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை
பர்கூர் அருகே, மனைவி இறந்த துக்கம் தாங்காமல் சிறப்பு காவல் உதவியாளர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது;
மனைவி இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் புருஷோத்தமன்.
தற்கொலை செய்து கொண்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் புருஷோத்தமனின் மனைவி சுஜாதா.
திருப்பத்தூர் மாவட்டம் வெங்கடாபுரம் அடுத்த பா.முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுஜாதா, இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி, பெங்களூருவில் வசித்து வருகின்றனர்.
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் புருஷோத்தமனின் மனைவி, கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில், திருப்பத்தூர்- தர்மபுரி சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், புருஷோத்தமன் தனது மனைவியை சிகிச்சைக்காக, பர்கூரில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று அழைத்து வந்துள்ளார். மருத்துவர் மதியம் 2 மணிக்கு வரச்சொன்னதால், சுஜாதாவை அழைத்துக்கொண்டு, பர்கூர் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் இருக்க வைத்துவிட்டு, புருஷோத்தமன் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
பின்னர் மீண்டும் சென்று பார்த்தபோது சுஜாதா தூக்குப்போட்டு தற்கொலை செய்தது செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சுஜாதாவின் உடலை கைப்பற்றிய போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து புருஷோத்தமன், பா முத்தம்பட்டி பகுதியில் வீட்டிற்கு சென்றார்; மனமுடைந்து காணப்பட்ட நிலையில் இன்று அதிகாலை, அவரது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மாடியிலிருந்து குதித்து கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், புருஷோத்தமன் தனது மனைவியை சிகிச்சைக்காக, பர்கூரில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று அழைத்து வந்துள்ளார். மருத்துவர் மதியம் 2 மணிக்கு வரச்சொன்னதால், சுஜாதாவை அழைத்துக்கொண்டு, பர்கூர் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் இருக்க வைத்துவிட்டு, புருஷோத்தமன் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
பின்னர் மீண்டும் சென்று பார்த்தபோது சுஜாதா தூக்குப்போட்டு தற்கொலை செய்தது செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சுஜாதாவின் உடலை கைப்பற்றிய போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து புருஷோத்தமன், பா முத்தம்பட்டி பகுதியில் வீட்டிற்கு சென்றார்; மனமுடைந்து காணப்பட்ட நிலையில் இன்று அதிகாலை, அவரது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மாடியிலிருந்து குதித்து கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.