பர்கூர் அருகே கல்பாரம் ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கல்பாரம் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-09-16 14:30 GMT

விபத்துக்குள்ளான மினி வேன்.

கிருஷ்ணகிரி பெத்ததாளப்பள்ளியில் இருந்து கருங்கற்களை ஏற்றிக் கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு இன்று வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேன் பர்கூரை அடுத்த அத்திமரத்துப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரில் சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த கிருஷ்ணகிரி அடுத்த பாஞ்சாலியூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ், அருள், சீனி, பிரபு ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் அங்கு சென்று விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News