கரூரில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற கெரோனா கண்டறியும் முகாமில் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2021-09-24 17:15 GMT

பைல் படம்

கரூர் மாவட்ட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 13 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 

   கரூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றை கண்டறியும் சிறப்பு முகாம்கள் தினசரி நடத்தப்படுகிறது.  இதனடிப்படையில்,  இன்று நடைபெற்ற கொரோனா தொற்றை கண்டறியும் முகாமில், 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று  வந்த 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

 கரூர் மாவட்டத்தில் கொரொன தொற்றால் பாதிக்கப்பட்ட 179  பேர் கரூர்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்துதலும் உள்ளனர். 


Tags:    

Similar News