தைல தோப்பு அருகே மது விற்றவர் கைது: குளித்தலை போலீசார் விசாரணை

குளித்தலை, தைல தோப்பு அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-03-08 09:30 GMT
தைல தோப்பு அருகே  மது விற்றவர் கைது:  குளித்தலை போலீசார் விசாரணை
  • whatsapp icon

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் பொய்யாமணி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் மணி (51). இவர் கோட்டையார் தோட்டம் தைல தோப்பு அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது விற்ற மணியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஐந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து,  இன்று 7ஆம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

Tags:    

Similar News