இளைஞர் வெட்டி கொலை, மர்ம நபர்கள் வெறிச் செயல், பதட்டம், போலீஸ் குவிப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பதட்டம் மற்றும் பரபரப்பு எற்பட்டுள்ளது.

Update: 2021-08-30 03:18 GMT

பைல் படம்

கரூர் மாவட்டம்,, குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தை  சேர்ந்த அருண்குமாரை (22). நேற்று இரவு கீழசிந்தலாவடி மாரியம்மன் கோவில் அருகில் பகுதியில்  10க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள்  வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.

 இதையடுத்து  பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், டிஎஸ்பி பொறுப்பு சக்திவேல்  மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்த அருண்குமார் கொலை குறித்து விசாரணை நடத்தினர். 

லாலாபேட்டை காவல் நிலையப்  போலீஸார் இறந்த அருண்குமாரின் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக சிந்தலவாடி பகுதியைச்  சேர்ந்த 5 ற்கும் மேற்பட்டோரை பிடித்து கொலை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர், சம்பவ இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News