அச்சமின்றி திரியும் பொதுமக்கள்....பலனற்றுபோகும் ஊரடங்கு...

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் மக்கள் அச்சமின்றி திரிகின்றனர். ஊரடங்கு பலனற்று போகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-12 06:26 GMT

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் இரண்டாவது அலை வெகு தீவிரமாக பரவி வருகிறது. நோய் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கரூரில் முக்கிய சாலைகளில் பேரிகார்டு அமைக்கப்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய காரணங்கள் இன்றி வெளியே வரும் பொது மக்களையும் முழுக்கவசம் அணியாதவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் 200 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.

ஆனால், பொதுமக்கள் கொரோனா அச்சமின்றி அதிக அளவில் வெளியே இரு சக்கர் வாகனம் மூலம் உலா வருகின்றனர்.  இதனால் அதிகளவில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

Tags:    

Similar News