ரூ. 56 லட்சம் ஏடிஎம் பணம் பறிமுதல்: தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை

ஆவணமில்லாமல் கொண்டு சென்ற ஏ.டி .எம் பணம் பறிமுதல்

Update: 2021-04-01 04:45 GMT

கரூரில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.56 லட்சம் ஏடிஎம் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து கரூவூலத்தில் ஒப்படைத்தனர்.

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இரும்பூதிபட்டி பேருந்து நிறுத்தத்தின் அருகே  பறக்கும் படை அலுவலர்  ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது,  ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக வந்திருந்த வாகனத்தை ஆய்வு செய்ததில், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரிய வந்தது. அதில் ரூபாய் 56 லட்சம்  இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து குளித்தலை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருமானவரித் துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் வருகை தந்து ஆய்வு செய்து ரூபாய் 56 லட்சம் ரொக்கத்தை குளித்தலை சார் கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து ரூபாய் 56 லட்சம் சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News