கரூரில் நாளை கோவாக்சின் 2 ம் டோஸ் முகாம்

கரூரில் மாவட்டத்தில் நாளை கோவாக்சின் 2 ம் டோஸ் செலுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-13 16:45 GMT

மாதிரி படம் 

கரூர் மாவட்டத்தில் நாளை 4 இடங்களில் கோவாக்சின் 2 ம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அதற்கான சான்றிதழை கொண்டு வந்து 2 ம் டோஸ் செலுத்திக் கொள்ளலாம். கரூர் நகராட்சி பகுதியில் உள்ள பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 400 பேருக்கும், ராயனூர் பகவதி அம்மன் கோவில் அலுவலகத்தில் 250 பேருக்கும், கரூர் மாவட்ட நீதிமன்றம் 300 பேருக்கும் (நீதிமன்ற பணியாளர்களுக்கு மட்டும்), குளித்தலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 250 பேருக்கும்  என 4 இடங்களில் கொரோனா  2 ம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News