லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு
குளித்தலை புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது லாரி மோதியதில் காயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே டிப்பர் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே டிப்பர் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.
குளித்தலை அருகே பங்களாபுதூரைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் மணிகண்டன் ( 32). இவர் பேட்டைவாய்த்தலையில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகிறது. இந்நிலையில், பரமத்தி வேலூரில் இருக்கும் 9 மாத கர்ப்பிணியான தனது மனைவி தமிழ் செல்வியை பார்ப்பதற்காக, இன்று மாலை பங்களாபுதூரில் இருந்து, இரு சக்கர வாகனத்தில் கரூர் புறவழிச்சாலை வழியாக சென்றார். அப்போது தண்ணீர்பள்ளி என்ற இடத்தில் கரூருக்கு சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியும், மணிகண்டன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை, அருகிலிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த குளித்தலை காவல் நிலையப் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.