குளித்தலை அருகே பல்வேறு பகுதிகளில் வரும் 25 ம் தேதி மின்நிறுத்தம்

குளித்தலை அருகே பல்வேறு பகுதிகளில் வரும் 25 ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Update: 2022-01-23 10:21 GMT

பைல் படம்.

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 25ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை, தோகைமலை, நச்சலூர், வல்லம், மாயனூர், சிந்தாமணிப்பட்டி, கொசூர், பாலவிடுதி, பஞ்சப்பட்டி, பனிக்கம்பட்டி ஆகிய துணை மின்நிலையத்தில் வரும் 25ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அய்யர்மலை, தோகைமலை, நச்சலூர், வல்லம், மாயனூர், சிந்தாமணிப்பட்டி, கொசூர், பாலவிடுதி, பஞ்சப்பட்டி, பனிக்கம்பட்டி ஆகிய துணைமின்நிலையத்தினை சார்ந்த பல்வேறு கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News