பாரத் பந்த் காரணமாக முற்றிலும் முடங்கியது கேரளா மாநிலம்

கேரளாவில் கடைபிடிக்கப்பட்ட பந்த் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Update: 2021-09-27 14:30 GMT

கேரளாவில் நடந்த பாரத் பந்த்

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பாரத் பந்த்க்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இந்த பந்த்திற்கு கேரளாவில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில் கேரளாவில் பந்த் முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.

அதன்படி, திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழு அளவில் அடைக்கப்பட்டு உள்ளன, மேலும் அரசு பேருந்துகள் இயக்கம் முழு அளவில் தடை செய்யப்பட்ட  நிலையில் ஆட்டோ, கார், டாக்சி உள்ளிட்ட தனியார் வாகனங்களின் இயக்கமும் முற்றிலும் இயங்கவில்லை. கேரளாவில் கடைபிடிக்கப்படும் பந்த் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே முக்கிய அரசு பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளை காவல்துறையினர் காவல்துறை வாகனம் மூலம் பாதுகாப்பாக கொண்டு விட்டனர்.

Tags:    

Similar News