குமரியில் ஊரடங்கு விதிமீறல்-ஒரே நாளில் 2373 பேருக்கு அபராதம்,62 வாகனங்கள் பறிமுதல்

குமரியில் ஒரே நாளில் 2373 பேருக்கு அபராதம் 62 பேர் மீது வழக்கு பதிவு 62 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Update: 2021-06-11 15:30 GMT

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 48 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி அவசிய காரணங்கள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் முககவசம் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர், இந்நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய வாகன தணிக்கையின் போது முக கவசம் அணியாமல் வந்ததாக 2303 பேர் மீதும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்ததாக 70 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

ஊரடங்கை மீறியதாக 62 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 62 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News