குமரியில் ஆதரவற்றோர்க்கு ஆதரவு கரம் நீட்டிய காவல்துறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதரவற்றோர்களுக்கு தினமும் உணவு அளித்து வரும் காவல்துறையின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.;

Update: 2021-06-01 12:48 GMT
குமரியில் ஆதரவற்றோர்க்கு  ஆதரவு கரம் நீட்டிய காவல்துறை
  • whatsapp icon

கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வசருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி பலர் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதால் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு குமரி மாவட்டத்தில் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் சாலை ஓரங்களிலும் பேருந்து நிலையங்களிலும் வாழும் ஆதரவற்றோர், அனைவருக்கும் மாவட்ட போலீசார் தங்களது சொந்த செலவில் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

மேலும் ஏழை எளிய மக்களுக்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகளை போலீசார் வழங்கினர். காவல்துறையின் இந்த செயல் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று உள்ளது.

Tags:    

Similar News