குமரியில் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம்

குமரியில் மாணவர்கள் சங்கங்களுக்கான கருத்தரங்கத்தில் சந்தேகங்களுக்கான தீர்வும் விளக்கங்களும் அளிக்கப்பட்டது.

Update: 2022-02-25 00:15 GMT

பங்கேற்ற மாணவியர்.

ரோட்டரி விழாவை முன்னிட்டு,  கன்னியாகுமரி மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில்,  நாகர்கோவிலில் மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராம்நாடு ஆகிய 7 மாவட்டங்களில் இருந்து,  கல்லூரி மாணவர் சங்கங்களை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான தனித்திறமை, சேவை மனப்பான்மை, வருங்கால எண்ணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.  சாதனையாளர்கள், அறிஞர்கள் மூலமாக மாணவர்களின் சந்தேகங்களுக்கான தீர்வும் விளக்கங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், சாதனையாளர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News