குமரியில் சமத்துவ பொங்கல் விழா - ஏராளமானோர் பங்கேற்பு

குமரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Update: 2022-01-14 15:00 GMT

கன்யாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே புன்னார்குளத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில், குமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தை அடுத்த அடுத்த புன்னார்குளம் ஜங்ஷனில் 51பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அதன்படி நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர், பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்றும் குலவையிட்டு பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடினர். மேலும் உழவர்களின் உற்ற தோழனான பசுக்களை வரிசையாக நிறுத்தி வைத்து அதற்கு மாலை அணிவித்து மஞ்சள் குங்கும திலகமிட்டு கரும்பு, பொங்கல் படையலிட்டு கோமாதா பூஜை செய்து வழிபட்டனர்.

Tags:    

Similar News