150 கிலோ புகையிலை மற்றும் குட்காக பறிமுதல், இருவர் கைது

குமரியில் 150 கிலோ புகையிலை மற்றும் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகள் இருவரை கைது செய்தனர்.

Update: 2021-07-03 14:30 GMT

கன்னியாகுமரியில் புகையிலை, குட்கா போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலமாக கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தொடர் புகார் வந்தது.

இதனை தொடர்ந்து போதை பொருட்கள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இரணியல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர் ராஜ் தலைமையில் போலீசார் பேயன்குழி மீன் மார்க்கெட் அருகில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற இருவரை பிடித்து விசாரித்த போது அவர்கள் செம்பொன்விளை பகுதியை சேர்ந்த ஜோயலின் ஜோ(42) மற்றும் மண்டைக்காடு பகுதியை சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர் (43) என்பது தெரிய வந்தது.

மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

குறிப்பாக சிறுவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News