மினி பஸ் அதிபர் வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் தங்க நகைகள் திருட்டு

குமரியில் மினி பஸ் அதிபரின் வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் தங்க நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-08-11 13:45 GMT

குமரியில் திருட்டு நடந்த மினி பஸ் அதிபரின் வீடு

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே முருங்கவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ், மினி பேருந்து அதிபரான இவருக்கு மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

இரண்டு பெண் பிள்ளைகளுக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி ஒரு மகள் மகனுடன் சுந்தர் ராஜ் தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் தொழில் சம்பந்தமாக சுந்தர்ராஜ் சென்னைக்கு சென்ற நிலையில் மனைவி விக்டரி பாய் தனது பிள்ளைகளுடன் வீட்டை பூட்டி விட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய சுந்தர்ராஜ் வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் வீட்டின் உள்ளே பிரோவை பார்த்த போது பிரோ உடைக்கப்பட்டு காணப்பட்டதோடு அதில் இருந்த 35 சவரன் தங்க நகைகள் திருட்டு போனதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து சுந்தர்ராஜ் தக்கலை காவல் நிலையத்திற்கு தகவலளித்தார், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருட்டு போன வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில் மர்ம நபர்களை கண்டுபிடிக்க கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News