அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு - 4 வாலிபர்கள் கைது

குமரியில், அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-19 12:30 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்தவர் உதயகுமார் (49), இவர் பார்வதிபுரம் பஸ் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பெருவிளை பகுதியை சேர்ந்த அஜித்குமார் ( 31 ), பள்ளிவிளையை சேர்ந்த பிரகாஷ் (26), மேல பெருவிளையை சேர்ந்த மிக்கேல் (36), திட்டுவிளை சேர்ந்த அஜித் (21 ) ஆகியோர் உதயகுமாரிடம் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.500 பறித்து சென்றனர்.

இது குறித்து உதயகுமார் வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பணம் பறிப்பில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News