குமரியில் முதல்கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் தொடக்கம்

குமரியில் முதல்கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணியில் 20 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

Update: 2022-01-30 15:15 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் உள்ள நிலைகள் பறவைகளை

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணியில் 20 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கால நிலைகள் பறவைகளை வெகுவாக கவர்வதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் வயல் வெளிகளில் அதிக அளவிலான உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். வருடம் தோறும் செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை வெளிநாட்டு பறவைகள் இங்கு வருவதை காணலாம்.

குமரி மாவட்டத்தில் இரு பருவ மழை காலம் இருப்பதாலும், இயற்கை வளம் மிகுதியாக காணப்படுவதாலும் மற்றும் இரண்டாயிரதிற்க்கும் மேற்பட்ட குளங்கள் உள்பட வயல்வெளிகள் மற்றும் நன்னீர் பகுதிகள் அதிக அளவில் உள்ளதாலும் இங்கு அதிக அளவிலான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன.

மாவட்டத்தில் உள்நாட்டு பறவைகளான நீர் காகம், முக்குளிப்பான், வெண் கொக்கு, நத்தை கொத்தி நாரை, கூழக்கிடா உள்ளிட்ட பறவைகள் எப்போதும் பார்க்க முடிகிறது.ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ஆஸ்பிரே, ப்ளோவர் , சான்ட் பைபர் , சிவப்பு ஸாங் , பிளமிங்கோ, காஸ்பியன் டேர்ன் உள்ளிட்ட பறவைகள் ஆஸ்திரேலியா, நியுசிலாந்து , ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு அதிக அளவில் வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையினர் சார்பாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது.

இதில் ராஜாக்கமங்கலம், புத்தளம், மணகுடி உள்ளிட்ட பகுதிகளில் மூன்று பிரிவுகளாக 20 க்கு மேற்பட்ட வனத்துறையினர் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரிக்கப்பட்டு உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர் மேலும் கொரோன காலம் என்பதால் இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு பணியில் மாணவர்கள் ஈடுபடுத்த படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News