டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள்: நாகர்கோவில் மாநகராட்சியில் தீவிரம்

மாநகராட்சியிலுள்ள பள்ளிகள், தெருக்கள், முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது

Update: 2021-11-07 15:30 GMT

நாகர்கோவிலில்  நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு  பணி

பருவமழை பெய்து வருவதை அடுத்து நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.அதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில், தெருக்கள், முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன.மேலும், பள்ளி வளாகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தினர் எடுத்துரைத்தனர்.

Tags:    

Similar News