திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கூட்டு தூய்மை பணிகள்: மாநகராட்சி ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்றன.

Update: 2021-07-17 14:30 GMT

தூய்மை பணியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது, அதன்படி இன்று கரியமாணிக்கபுரம் பகுதியில் வைத்து சிறப்பு கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்றன.

இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆகியோர் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து கூட்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. வரும் நாட்களில் நாகர்கோவில் மாநகர பகுதி முழுவதும் இதுபோல் தூய்மைப் பணியில் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற உள்ளன.

இதனிடையே மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களின் தொடர்பு எண் மற்றும் விவரத்தினை தெரிவிக்க மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags:    

Similar News