கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை: கபசுர குடிநீர் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

குமரியில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

Update: 2021-08-05 11:00 GMT

நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையாக கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வழங்கினார்.

கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தொடங்கி வைத்ததோடு கபசுர குடிநீர் குடித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி , நாகர்கோவில் மாநகர ஆணையர் ஆஷாஅஜித், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி மற்றும் மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News