குமரியில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

குமரியில் அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் தங்களை திமுகவில் இணைந்த கொண்டனர்.

Update: 2022-03-12 04:45 GMT

நாகர்கோவில் மாநகராட்சி ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட அதிமுக, பாஜகவை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரமேஷ் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களை திமுகவில் இணைத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட அதிமுக, பாஜகவை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரமேஷ் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மகேஷ் முன்னிலையில் மாற்றி கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

Tags:    

Similar News