அரசு ஊழியர்கள் மறியல்- 50 பேர் கைது

Update: 2021-02-02 08:54 GMT

நாகர்கோவிலில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத காலத்தை பணி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News