முன்னாள் படைவீரர்களுக்கு எஸ்பி., அழைப்பு

Update: 2021-03-13 05:30 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற போலீசார் விண்ணப்பிக்க மாவட்ட எஸ்பி., பத்ரிநாராயணன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிவிக்கையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பம் உள்ள கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற போலீசார், இளநிலை படை அலுவலர்கள் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குனர் அலுவலகத்திலோ அல்லது தங்களது பகுதி போலீஸ் ஸ்டேஷன்களிலோ தொடர்பு கொண்டு தங்கள் விருப்ப விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் .

தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் படைவீர்கள், ஓய்வு பெற்ற போலீசார், இளநிலை படை அலுவலர்கள் உரிய மரியாதையுடன் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் . பணி முடிந்தவுடன் ஊதியம் வழங்கப்படும் .தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீர்கள், ஓய்வு பெற்ற போலீசார், இளநிலை படை அலுவலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார் .

Tags:    

Similar News