பொன்னாருக்கு ஆதரவாக அமித்ஷா பிரச்சாரம்

Update: 2021-03-07 14:45 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் "வெற்றிக்கொடி நாட்டி வெல்வோம்" என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள திருவனந்த புரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நாகர்கோவில் வந்தார் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா.

தொடர்ந்து சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள தானுமாலயன் சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமித்ஷா அங்குள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார். முன்னதாக பல்வேறு வகையான மேளதாளங்கள் மற்றும் பூரண கும்ப மரியாதையுடன் கூடிய வரவேற்பை கண்டு மகிழ்ச்சி அடைந்த அமித்ஷா பாஜகவினர் மத்தியில் கையசைத்து நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News