ஏப்ரல் 3 ல் பிரியங்கா காந்தி குமரி வருகை

Update: 2021-03-31 18:00 GMT

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணி வேட்பளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்கிறார்.

வரும் 3 ஆம் தேதி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்று தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

முன்னதாக வரும் 3 ஆம் தேதி தமிழகம் வரும் பிரியங்கா காந்தி சொன்னை ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மரியாதை செய்துவிட்டு அங்கிருந்து திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் வருகிறார்.

Tags:    

Similar News