குமரியில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்

குமரி மூஞ்சிறை பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-12 13:00 GMT

கன்னியாகுமரி மாவட்டதில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்  புதுக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அணில்குமார் மூஞ்சிறை பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக 4 பேர் கூடி நிற்பதை கண்டார்.அங்கு சென்று பார்த்த போது 4 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

அனைவரும் அந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த தினேஷ்(36), பிரபின்(41) விஜய்(33). மற்றும் ஜஸ்டிஸ் (34) ஆகியோர் என தெரிய வந்தது. தொடர்ந்து 4 பேரையும் பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் சூதாடிய சீட்டு கட்டு  மற்றும் சூதாடிய 150 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தார்.

Tags:    

Similar News