போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஒரே நாளில் 2024 பேர் மீது வழக்கு

கடந்த மூன்று மாதங்களில் விதி மீறல்களில் ஈடுபட்ட 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவாகியுள்ளது

Update: 2021-11-08 16:00 GMT

கன்னியாகுமரியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகத்துடன் வாகனங்களை இயக்குவதாலும்,போக்குவரத்து  விதிமுறைகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளால் சரியான முறையில் வாகனங்களை இயக்கி வரும் வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் நடந்து செல்லும் பொது மக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துவதாகவும்  ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்நிலையில், விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும், போக்குவரத்து விதி மீறல்களை தடுக்கவும், மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம் இல்லாதது, உரிய ஆவணங்கள் இல்லாதது, அதிவேகம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒரேநாளில் 2024 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த மூன்று மாதங்களில் விதி மீறல்களில் ஈடுபட்ட 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனாலும் தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Tags:    

Similar News