ராஜநாக பாம்பு கடித்து குமரியை சேர்ந்த பூங்கா ஊழியர் பலி.

பூங்கா பராமரிப்பு பணியின் போது ராஜநாக பாம்பு கடித்து ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Update: 2021-07-05 10:15 GMT

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் காட்டாக்கடை பகுதியை சேர்ந்த அர்ஷத் ( 44 ) என்பவர் பராமரிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே பூங்காவில் உள்ள பாம்பின் கூண்டை தூர்வாரி பராமரித்து கொண்டிருந்த போது ராஜநாகம் ஒன்று அவரை கடித்து உள்ளது.

இதில் சுயநினைவை இழந்த அவர் பாம்பின் கூட்டிற்குள்லேயே இறந்து போனார். வெகு நேரமாகியும் அர்ஷத் வெளியே வராததை கண்ட சக ஊழியர்கள் பாம்பு கூட்டினுள் சென்று பார்த்த போது அவர் அங்கு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து அவரது உடலை பத்திரமாக மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News