போக்குவரத்து விதி மீறல், ஒரே நாளில் 2851 நபர்கள் மீது வழக்கு

குமரியில் ஒரே நாளில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 2851 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2021-08-11 14:00 GMT

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல், உரிய ஆவணங்கள் இல்லாமலும், அதிக பாரம் ஏற்றி, போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்வதால் விபத்துகள் அதிகரிப்பதாக காவல்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல் வாகனங்களால் விபத்துக்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அதன் படி மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லை பகுதிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

அதன் படி நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம், உரிய ஆவனங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றி போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் போன்ற போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட 2851 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News