குமரியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு

குமரியில் மாஸ்க் அணியாமல் வரும் நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து, மாஸ்க் வழங்கி, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2022-01-07 00:45 GMT

மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்த போலீசார். 

கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில்,  தற்போது பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு ஒமிக்கிரான் பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில்,  இதனை கட்டுப்படுத்தவும்,  நோய் பரவலை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக,  கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் முக்கிய சந்திப்புகள் உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளும் போலீசார்,  மாஸ்க் அணியாமல் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி,  அவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிப்பதோடு,  அவர்களுக்கு மாஸ்க் வழங்கி மாஸ்க் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். நோய் பரவல் அதிகரித்து உள்ள நிலையில், மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News