குமரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் குமரியில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது.

Update: 2022-02-12 01:40 GMT

குமரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

1 மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் இந்து கல்லூரி மற்றும் அல்போன்சா மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.

இதே போன்று நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News