குமரியில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து பணம் பறிப்பு: ஒருவர் கைது

குமரியில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து பணம் பறித்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-25 15:00 GMT

கைது செய்யப்பட்ட சுரேஷ்.

குமாரி மாவட்டத்தில் ஓஎல்எக்ஸ் (ரோல்ஸ்) மூலம் வேலைவாங்கி தருவதாக போலியாக விளம்பரம் செய்ததை நம்பி ஏமாந்து பணத்தை இழந்த பலர் தொடர்ச்சியாக சைபர்கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது சம்பந்தமாக விசாரணை செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சைபர்கிரைம் ஏடிஎஸ்பி., சுந்தரம் மேற்பார்வையில், ஆய்வாளர் வசந்தி தலைமையில் போலீசார் புலன்விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணயில் OLX இல் பல்வேறு பெயர்களில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய நபர் நடைக்காவு பகுதியை சார்ந்த நேசையன் என்பவரது மகன் சுரேஷ் (வயது 41) என்பது தெரியவந்தது.

இதனிடையே குற்றவாளியை தேடிவந்த நிலையில் இன்று குற்றவாளியை இன்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பலநபர்களை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார், இது தொடர்பாக குற்றவாளியின் வங்கி கணக்கு விபரங்களை வைத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி சம்பந்தமாக சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்ச்சியாக மாவட்ட காவல்துறை சார்பில் பல சமயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இதுபோன்று பணத்தை கொடுத்து ஏமாறுபவர்கள் இருந்து வருவது குருப்பிடத்தக்கது.

Tags:    

Similar News