கன்னியாகுமரிக்கு ஆளுநர் ரவி வருகை - மூன்று அடுக்கு பாதுகாப்பு

கன்னியாகுமரிக்கு, தமிழக ஆளுநர் ரவி வருகையை தொடந்து, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Update: 2022-01-20 01:00 GMT

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரத்தில்,  ரூபாய் 15 கோடி செலவில் சுவாமி விவேகானந்தர் அவைக்கூட கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இன்று இந்த கட்டிடம் திறக்கப்படும் நிலையில்,  இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக,  நேற்று மாலை கன்னியாகுமரி வந்த தமிழக ஆளுநரை,  மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து விவேகானந்தா கேந்திரத்தில் ஓய்வு எடுத்த ஆளுநர்,  இன்று நிகழ்ச்சி முடிந்த பின்னர்,  தூத்துக்குடி வரை தரை மார்க்கமாக சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். இதையடுத்து, கன்னியாகுமரியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News