சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திய 22 பேருக்கு தங்க நாணயம் பரிசு

குமரியில் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திய தேர்ந்தெடுக்கப்பட்ட 22 பேருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது..

Update: 2021-10-29 15:00 GMT

சிறப்பு  முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ௨௨ பேருக்கு கலெக்டர் அரவிந்த் தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார்.

100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி கொண்ட மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் உருவாகும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் தயக்கம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தும் 22 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்க நாணயம் பரிசலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கி பாராட்டினார்.

Tags:    

Similar News