பெட்ரோல் பங்கில் கொள்ளை முயற்சி: ஊழியர்களின் சாதுர்யத்தால் தப்பிய பணம்

குமரியில் பெட்ரோல் பங்கில் கொள்ளை முயற்சி நடைபெற்ற நிலையில் ஊழியர் சாதுர்யாக தடுத்ததால் பல லட்சம் பணம் தப்பியது

Update: 2022-03-20 04:15 GMT

மர்ம நபர் விட்டுச்சென்ற பெட்ரோல் பங்கில் எரிபொருள் வியாபாரம் செய்த பணம்

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது தினேஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் அருகில் இருசக்கர வாகனத்தில் லுங்கி பனியன் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்து கொண்டு இருந்தார்.

இதனிடையே ஆள் இல்லாத நேரம் பார்த்து திடீரென பங்க் ஊழியர் நெல்சன் என்பவரை தாக்கி பங்கில் இருந்த பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு தான் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயன்றுள்ளார்.சூழ்நிலையை புரிந்து கொண்டு சாதுர்ரியமாக செயல்பட்ட பங்க் ஊழியர் முதியவரான நெல்சன் அவரை திருப்பி தாக்கியதோடு அங்கிருந்து போகவிடாமல் வழிமறித்தார்.

இதை கண்ட மற்ற ஊழியர்களும் மர்ம நபரை சூழ்ந்து தாக்க முயன்றதால், அந்த மர்ம நபர் பண கட்டுகளை அங்கேயே வீசி விட்டு, இருசக்கர வாகனத்தையும் அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடினார்.இதுகுறித்து பங்க் ஊழியர் நெல்சன் குளச்சல் காவல் நிலையத்தில்  அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த மர்ம நபர் கொண்டு வந்த இருசக்கர வாகனம் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவரிடம் இருந்து திருடி கொண்டு வந்ததும், திருட்டு இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கிற்கு வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது.இதனிடையே பங்க் ஊழியரை தாக்கி பணத்தை திருடி தப்ப செல்ல முயன்று ஊழியர் தடுத்ததால் பணத்தையும் இருசக்கர வாகனத்தையும் போட்டு விட்டு கொள்ளையன் தப்பி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News