குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை

Update: 2021-05-07 12:30 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது, கோடை வெயிலின் தாக்கம் மற்றும் கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நாகர்கோவில், சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது, கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் வகையில்  பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போன்று மழையால் விவசாய தேவைகள் நிறைவேறும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். தற்போது பெய்த மழையால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.

Tags:    

Similar News