சங்கராபுரம் அருகே கணக்கில் வராத பணம்: தேர்தல் பறக்கும் படையினர்பறிமுதல்

சங்கராபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-09-18 13:57 GMT

வாகனசோதனையில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சங்கராபுரம் அருகே சு.குளத்தூர் பிரிவு ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர், காவல் துறையினர் இணைந்து, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அரியலூர் கிராமத்தை சேர்ந்த  பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்த என்ற இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.58,500/- இருந்தது.

பணத்தைக் கைப்பற்றிய போலீசார் சங்கராபுரம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் (RO) ரத்தினமாலாவிடம்  ஒப்படைத்தனர். 

Tags:    

Similar News