பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலி

பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2022-01-15 10:45 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டம், மேச்சேரி வெள்ளார் ஆட்டுக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் தங்கமணி (வயது 21). கட்டிட தொழிலாளி. இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்.

இவர் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில், பவானி அருகே குப்பிச்சிபாளையம் என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிளில் மீது மோதியதில் தங்கமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிப்பர் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News