அத்தாணி பவானி ஆற்றில் மூழ்கிய இளைஞர் மாயம்: தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்

அந்தியூர் அடுத்த அத்தாணி பவானி ஆற்றில் மூழ்கி மாயமான வாலிபரை தீவிரமாக தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-09-18 08:00 GMT
சசிக்குமார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி ஊசிமலையைச் சேர்ந்த மாதேஷ் மகன் சசிகுமார் (22). இவர் தற்போது முனியப்பன் பாளையத்தில் உள்ள ஒரு செங்கல் சூலையில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை தனது நண்பன் கவின்குமார் என்பவருடன் அத்தாணி- சவுண்டபூர் பாலம் அடியில் ஓடும் பவானி ஆற்றில் குளிக்க சென்றார்.

அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்கு செல்லும் பொழுது நீச்சல் தெரியாததால் தண்ணீர் இழுத்து செல்லப்பட்டு மாயமானார். இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கும் ஆப்பக்கூடல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக தேடியும் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து தற்போது சசிக்குமாரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News