பாலியல் பலாத்கார வழக்கில் வாலிபர் கைது: உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்

மைனர் பெண்ணை கர்பமாக்கியதாக கூறி வாலிபர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், உறவினர்கள் அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-03 16:30 GMT

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு, போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் நிரோஜன். 29வயதான இவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து உள்ளார். நிரோஜனின் மனைவி கர்ப்பமாக இருந்து உள்ளார். இது தொடர்பாக கடந்த 5 மாதங்களாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து உள்ளனர். இந்த நிலையில் இன்று பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில் உடனடியாக அட்மிட் ஆக சொல்லி மருத்துவர்கள் கூறி உள்ளதை அடுத்து அட்மிட் ஆகி உள்ளனர்.

அப்போது மருத்துவர்களிடம் நிரோஜனின் மனைவியின் சான்றிதழ்களை சமர்ப்பித்து உள்ளார். மருத்துவர்கள் சான்றிதழ்களை பரிசோதிக்கும் போது அவரது மனைவிக்கு வயது 16 என தெரிய வருகிறது. இதனை அடுத்து மருத்துவர்கள் உடனடியாக ஈரோடு அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் போக்கோ சட்டத்தின் கீழ் நிரோஜனை கைது செய்தனர். கைதை கண்டித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு நிரோஜனின் மற்றும் அவரது 16 வயது மனைவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட இலங்கை தமிழர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News