அந்தியூர் அருகே உறவினர் வீட்டுக்கு சென்ற மூதாட்டி மாயம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உறவினர் வீட்டிற்கு சென்ற மூதாட்டி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-03-09 01:00 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சின்னதம்பிபாளையம், அண்ணமார் கோயில் வீதியை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 72). இவர் கடந்த 5ம் தேதி தனது உறவினரை பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளார். பின்னர், இரவு மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்ளில் தேடியும் முனியம்மாள் குறித்த எவ்வித தகவலும் கிடைக்காததால் அந்தியூர் போலீசில் புகார் செய்யப்பட்டதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News